உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் முதல் காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 112 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்திய பாகிஸ்தான்,விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணியானது.
மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் ஆடுகளம் விட்டகன்றனர்.சந்தர்போல் மட்டும் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அப்ரிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
113 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் கம்ரன் அக்மல்,மொகமட் ஹஃபீஸ் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியுடன் விக்கெட் இழப்பின்றி 20.5 ஓவர்களில் 113 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் ஏழாவது முறையாக (1979,1983,1987, 1992,1996,1999,2011) காலிறுதிக்கு முன்னேறியது.
1979,1983,1987 ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான்,1992 இல் முதன்முதலில் உலகக் கிண்ணத்தை வென்றது.1999 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியது.இம்முறை பாகிஸ்தான் இறுதிவரை முன்னேறுமா?

0 comments:
Post a Comment