Pages

Wednesday, March 24, 2010

தடுமாறும் அணிகள்
வீரர்களின் தொடர் காயங்களால் ஐ.பி.எல் அணிகள் தடுமாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதைவிட டில்லி டேர் டெவில்ஸ் அணியும் தடுமாற்றத்துடனே போட்டிகளில் விளையாடுகிறது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்களான கிரஹம் ஸ்மித்,மஸ்கரன்ஹாஸ் ஆகியோர் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரை விட்டு விலகியுள்ள நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி, டில்லி டேர் டெவில்ஸ் அணித் தலைவர் கம்பிர், வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, வெய்ன் பார்னெல் ஆகியோர் காயமடைந்துள்ளதால் டில்லி அணியும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளப்போகிறது.

மூன்றாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஆரம்பித்த ஒரிரு வாரத்திற்குள் இந்திய வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இது அடுத்த மாதம் நடைபெறவுள்ள "20-20" உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

ஐ.பி.எல். தொடரில் 19 லீக் போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அணிகளின் தற்போதைய நிலை

பெங்களூர் ரோயல் சலஞ்சேர்ஸ்:
துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகல துறைகளிலும் சாதிக்கும் பலம் வாய்ந்த பெங்களூர் ரோயல் சலஞ்சேர்ஸ் அணி இம்முறை மாபெரும் எழுச்சி கண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் அசைக்க முடியாத அணியாகவுள்ளது. தொடர்ந்து 4 போட்டிகளில் ஆடமிழக்காத நாயகன் காலிஸ், களத்தில் கடைசிவரை இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். மனிஷ் பாண்டே, உத்தப்பா ஆகியோரும் அதிரடியைக் காட்டுகிறார்கள். இந்த அதிரடி தொடரும் பட்சத்தில்,பெங்களூர் அணி விரைவாக அரையிறுதிக்குள் முன்னேறிவிடும். பந்துவீச்சாளர்களின் பங்கும் அசத்தலாகவே உள்ளது வினய் குமார், பிரவீன் குமார், டேல் ஸ்ரெய்ன் ஆகியோரின் பந்துவீச்சு அபாரம்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பிரவீன் குமார் ஹட்ரிக் சாதனை புரிந்தார்.2010 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் ஹட்ரிக் சாதனையாகவும் இது அமைந்தது.


சென்னை சூப்பர் கிங்க்ஸ்:
சென்னை அணிஅதிர்ச்சித் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிகளைப் பெறவேண்டுமானால் "மங்கூஸ்"ஹைடன் தனது அதிரடியைக் காட்டவேண்டும். முரளி விஜய், பத்ரிநாத், ரெய்னாஆகியோர் துடுப்பாட்டத்தில் சாதித்தால்தான் அணி வலுவான நிலையை அடையும். கோனி, பாலாஜி, மார்கல் என வேகப்பந்து வீச்ச்சில் இன்னும் கவனமெடுக்கவேண்டும்.சுழல் நாயகன் முரளி தொடர்ந்து சிறப்பாக செயற்படுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.டோனியின் மீள் வருகையுடன் வெற்றிகளைப் பெறுமா சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

டில்லி டேர் டெவில்ஸ்:
முதல் இரண்டு போட்டிகளை வெற்றியுடன் ஆரம்பித்த டில்லி அணி, கம்பிரின் காயத்துக்கு பின், தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. ஷேவாக் விரைவாக வீழ்ந்து விட்டால், பின் தினேஷ் கார்த்திக், டிவிலியர்ஸ், தில்ஷான் போன்றோர் ஓட்டங்களைக்குவிக்கத் தவறுகின்றனர்.மஹரூப், நானஸ், பிரதீப் சங்வான் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் சாதிக்க வேண்டும். நெஹ்ரா, வெய்ன் பார்னெல் ஆகியோர் காயமடைந்துள்ளதால் வேகப் பந்துவீச்சிலும் பின்னடைவே.

டெக்கான் சார்ஜர்ஸ்:
டெக்கான் அணியில் அணித் தலைவர் அடம் கில்கிறிஸ்ட்,ஹேர்ஷல் கிப்ஸ், சைமண்ட்ஸ் என துடுப்பாட்ட வரிசை பலமாகவுள்ளது. வேகப்பந்து வீச்சில் வாஸ், ஆரம்பத்திலே விக்கெட்டுகளை வீழ்த்த, பிரக்யான் ஓஜா, ரோகித் சர்மா ஆகியோர் சிக்கனமாகப் பந்து வீசுவதால் டெக்கான் அணியை எதிரணிகள்வீழ்த்துவது எளிதான விடயமல்ல. அணி வீரர்களின் கூட்டு முயற்சி தொடருமானால் இலகுவாக அரையிறுதிக்குள் நுழைந்து கொள்ளும் டெக்கான் சார்ஜர்ஸ்.

கொல்கட்டா நைட் ரைடர்ஸ்:
ஆரம்பப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுவந்த கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியால் தொடர்ந்து வெற்றிகளைப் பெற முடியாமைக்குக் காரணம் சரிந்த துடுப்பாட்டமே. கங்குலி இம்முறையும் சாதிக்கத் தவறுகிறார். மெத்தியூஸ் தனக்கு வழங்கப்படும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துகின்றார். அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஷேன் பொன்ட் அணிக்கு ஏமாற்றத்தையே கொடுக்கிறார். பந்துவீச்சு துடுப்பாட்டம் ஆகிய துறைகளில் இன்னும் முன்னேற்றம் காணவேண்டும்.


மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் சச்சினை மட்டுமே நம்பியிருக்கிறது. சச்சின் விரைவாக வீழ்ந்தால் மும்பை அணியின் நிலைமையும் பரிதாபமே.சனத் இன்னும் தனது அதிரடியை காட்டவில்லை .கடந்த முறை சகலதுறைகளிலும் சாதித்த ப்ராவோ இம்முறை இன்னும் பெரிதாக பிரகாசிக்கவில்லை.அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பொல்லார்ட் எதிர்பார்த்தளவு எதுவுமே சாதிக்கவில்லை. பந்து வீச்சாளர்களில் மலிங்கா, ஹர்பஜன், சாகீர்கான் ஆகியோர் இன்னும் சாதித்தால் மாபெரும் எழுச்சி பெறலாம்.அறையிறுதிக்குள்ளும் நுழையலாம்.

ராஜஸ்தான் ரோயல்ஸ்:
ஷேன் வோர்ன் தலைமைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, ஷேன் வாட்சன், தடை செய்யப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாட முடியாத காரணத்தினால் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தென்னாபிரிக்க அணித் தலைவர் கிரஹம் ஸ்மித்தின் விரலில் காயம் ஏற்பட்டதால் மீதிப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை. மஸ்கரன்ஹாஸ் ஆகியோரும் காயமடைந்திருப்பதால் ராயல்ஸ் அணியால் சிறப்பாகப் பிரகாசிக்க முடியவில்லை. யூசுப் பத்தானை நம்பியே இருக்கிறது ராஜஸ்தான் ரோயல்ஸ்.ஆரம்பத்தில் அதிரடியாய் சதமடித்த இவரின் அதிரடியை இப்போது காணவில்லை

கிங்க்ஸ்11 பஞ்சாப்:
குமார் சங்ககார தலைமையிலான கிங்க்ஸ்11 பஞ்சாப் இதுவரை ஒரேயொருபோட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அணித் தலைமைப் பொறுப்பை மாற்றியும் அந்த அணியால் மீள முடியவில்லை. இந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு துடுப்பாட்ட வீரர்களே காரணம். மஹேல,சங்ககார,யுவராஜ் ஆகியோர் ஏமாற்றுவதால் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே. பந்து வீச்சு எதிரணி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டும் வகையிலில்லை.கடந்தமுறை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி அசத்திய ஷோன் மார்ஷ் இன்னும் அணியில் இணைந்து கொள்ளவில்லை இவரது வருகையின் பின் அசத்துமா கிங்க்ஸ்11 பஞ்சாப்.

இதுவரை நடைபெற்றுள்ள (மார்ச்-24 வரை ) போட்டிகளின் அடிப்படையில் பெங்களூர் ரோயல் சலஞ்சேர்ஸ், மும்பை இந்தியன்ஸ் டெக்கான் அணிகள் முன்னிலையில். கிங்க்ஸ்11 பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் நிலை பரிதாபமான நிலையே.

அரையிறுதிக்குள் நுழையப் போகும் அணிகள் அடுத்த வாரத்திற்குள் உறுதியாகிவிடும்.


ஐ.பி.எல் ஆடுகளங்கள் சூடு பிடிக்க அதிரடிகளும் ஆச்சரியங்களும் அரங்கேறும்

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates