Wednesday, March 13, 2013
வடக்கின் சமர்...
வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இது இரு அணிகளும் மோதிக்கொள்ளும் 107ஆவது போட்டியாகும்.இலங்கையில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் மூன்றாவது மிகப் பழமையான மாபெரும் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி...
இதுவரை நடைபெற்ற 106 போட்டிகளில்,சென்.ஜோன்ஸ் கல்லூரி 33 போட்டிகளிலும்,யாழ் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளன.38 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையில் முடிவடைந்துள்ளன.1 போட்டி மழையினால் கைவிடப்பட்ட அதேவேளை,7போட்டிகள் முடிவுகளின்றியும் நிறைவடைந்துள்ளன.
இம்முறை யாழ் மத்திய கல்லூரிக்கு பூபாலசிங்கம் டார்வினும்,சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு ஜெயக்குமார் அமிடஜனும் தலைமை வகிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி...
இம்முறை பருவகாலத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 14 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன்,3 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையிலும் 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 7 போட்டிகளில் பங்குபற்றி 3 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளை வெற்றி தோல்வியற்ற நிலையிலும் முடித்துள்ளது.
வழமைபோல் இம்முறையும் இரண்டு அணிகளின் பழைய மாணவர்கள் ஆதரவாளர்கள் அதிகம் பேர் போட்டிகளைக் காணவருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்...
0 comments:
Post a Comment